×

1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர், மே 10: விருதுநகரில் கடத்திய 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சிவகாசி விளம்பட்டி காமராஜர் காலனி அருகில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த வேன் மற்றும் பைக் கை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் 40 கிலோ எடையிலான 38 மூட்டைகளில் 1,520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள மருதகிணரை சேர்ந்த கலையரசன், தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அருகில் உள்ள மஹாதேவபட்டியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விருதுநகர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்புடைய நபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar District Anti Food Smuggling Unit police ,Vilampatti Kamaraj Colony ,Sivakasi ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு